தமிழக செய்திகள்

ரூ.5¾ லட்சம் நிலம் அபகரிப்பு

போலி ஆவணம் தயாரித்து ரூ.5¾ லட்சம் மதிப்புள்ள நிலத்தை அபகரித்ததாக 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்

தினத்தந்தி

விழுப்புரம்

நிலம் அபகரிப்பு

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த மயிலம் தீர்த்தக்குள தெருவை சேர்ந்தவர் கோவிந்தசாமி மனைவி சாந்தா (வயது 60). இவருடைய தந்தை சுப்புராயன் என்பவருக்கு கடந்த 2008-ம் ஆண்டில் அரசு சார்பில் இலவசமாக வழங்கப்பட்ட பட்டாவின்படி 1.42 ஏக்கர் நிலம் கிடைத்தது.

மயிலம் பகுதியில் உள்ள இந்த நிலத்தை சாந்தா பயன்படுத்தி வந்துள்ளார். இந்த சூழலில் வானூர் தாலுகா வங்காரம் கிராமத்தை சேர்ந்த முருகன், ரமேஷ் என்கிற ரங்கசாமி, மயிலத்தை சேர்ந்த அம்மையப்பன், புதுச்சேரி காளீஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்த சம்பத் ஆகிய 4 பேரும் சேர்ந்து போலி ஆவணம் தயாரித்து நிலத்தை அபகரித்ததாக கூறப்படுகிறது. அபகரிக்கப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.5 லட்சத்து 70 ஆயிரமாகும்.

4 பேர் மீது வழக்கு

இதுகுறித்து சாந்தா, விழுப்புரம் மாவட்ட நிலஅபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் முருகன், ரமேஷ், அம்மையப்பன், சம்பத் ஆகியோர் மீது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளவரசி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து