தமிழக செய்திகள்

சூதாடிய 5 பேர் கைது

நெகமம் அருகே சூதாடிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

தினத்தந்தி

நெகமம் அடுத்த சுந்தரகவுண்டனூர் அருகே பணம் சூதாட்டம் நடைபெறுவதாக நெகமம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் நெகமம் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்த திருப்பூர் மாவட்டம் விளாமரத்துப்பட்டியை சேர்ந்த வினோத்குமார் (வயது 37), ராமு (33), அருண் (37), சுண்டக்காம்பாளையம் லிங்குசாமி (28), புக்குளம் காளிமுத்து (47), சுந்தரகவுண்டனூர் சென்னியப்பன் ஆகிய 6 பேரை சுற்றி வளைத்தனர். ஆனால் சென்னியப்பன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். மற்ற 5 பேரும் போலீசில் சிக்கினர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு