தமிழக செய்திகள்

மதுபானம் விற்ற 5 பேர் கைது

திண்டுக்கல்லில் மதுபானம் விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

தினத்தந்தி

திண்டுக்கல் மதுவிலக்கு போலீஸ் துணை சூப்பிரண்டு சுந்தரபாண்டியன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஜேம்ஸ் ஜெயராஜ், சப்-இன்ஸ்பெக்டர் முரளி மற்றும் போலீசார், திண்டுக்கல் அஞ்சலி ரவுண்டானா, ஏ.வெள்ளோடு, மஞ்சநாயக்கன்பட்டி, தர்மத்துப்பட்டி, நெய்க்காரப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து சென்றனர்.

அப்போது அந்தந்த பகுதிகளில் மதுபானம் விற்றதாக எரியோட்டை சேர்ந்த சிவக்குமார் (வயது 25), ஏ.வெள்ளோட்டை சேர்ந்த அருள் ஞானபிரகாசம் (29), மஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்த விஜயன் (46), தர்மத்துப்பட்டியை சேர்ந்த மனோஜ்குமார் (37), நெய்க்காரப்பட்டியை சேர்ந்த மயில்சாமி (45) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 46 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்