தமிழக செய்திகள்

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 5 யூனிட்டுகள் நிறுத்தம்: 1,050 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

தூத்துக்குடியில் உள்ள அனல்மின் நிலையத்தில் 5 அலகுகள் மூலம் 1,050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது.

தினத்தந்தி

தூத்துக்குடியில் உள்ள அனல்மின் நிலையத்தில் 5 அலகுகள் மூலம் 1,050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. கடந்த மார்ச் 15-ம் தேதி அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட தீவிபத்து காரணமாக, முதலாவது, இரண்டாவது அலகுகள் முற்றிலும் எரிந்து சேதமானது.

4, 5-வது யூனிட்டுகள் பராமரிப்பு பணிகளுக்காக சில மாதங்களுக்கு முன்பே நிறுத்தப்பட்டது. 3-வது யூனிட்டில் மட்டும் 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் 3வது யூனிட் பழுது காரணமாக நேற்று முன்தினம் இரவு நிறுத்தப்பட்டது. இதனால் அனல்மின் நிலையத்தில் 5 யூனிட்களும் ஒரே நேரத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் 1,050 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை