தமிழக செய்திகள்

செல்போன் கடையில் ரூ.6½ லட்சம் கையாடல்

விருதுநகரில் செல்போன் கடையில் ரூ.6½ லட்சத்தை கையாடல் செய்த பெண் ஊழியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தினத்தந்தி

விருதுநகரில் செல்போன் கடையில் ரூ.6 லட்சத்தை கையாடல் செய்த பெண் ஊழியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

செல்போன் கடை

விருதுநகர் அல்லம்பட்டியை சேர்ந்தவர் கணேசன் (வயது 43). இவர் விருதுநகர்-மதுரை ரோட்டில் செல்போன் விற்பனை கடையும், அல்லம்பட்டியில் குளிர்பான விற்பனை கடையும் வைத்துள்ளார்.

இவரது செல்போன் விற்பனை கடையில் விருதுநகர் பாண்டியன் நகரை சேர்ந்த ஆர்த்தி லட்சுமி (22) என்பவர் காசாளராக பணியாற்றி வந்தார். கடையின் முழு கணக்கு வழக்குகளையும் அவரிடம் ஒப்படைத்திருந்ததாக கூறப்படுகிறது.

ரூ.6 லட்சம் கையாடல்

இந்தநிலையில் கடந்த ஏப்ரல் மாதம் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது கணேசனின் பையில் இருந்து ரூ. 20 ஆயிரத்தை ஆர்த்தி லட்சுமி எடுத்தது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் கணக்கு வழக்குகளை ஆய்வு செய்தார். அப்போது ஆர்த்தி லட்சுமி விற்பனை தொகையை குறைத்துக் காட்டியும் ரொக்கமாக விற்பனை செய்ததை ஜிபே முறையில் விற்பனை செய்ததாக கணக்கு எழுதியும் ரூ. 6 லட்சத்து 43 ஆயிரத்து 421-ஐ கையாடல் செய்தது தெரியவந்தது. கடையில் இருந்த 1 பவுன் மோதிரத்தையும் ஆர்த்தி லட்சுமி எடுத்தது தெரியவந்தது.

இதுபற்றி கணேசன் கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் மேற்கு போலீசார் ஆர்த்தி லட்சுமி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஈரானை தாக்கும் அளவுக்கு அமெரிக்காவிடம் வலிமை இல்லை; அதனாலேயே... மத்திய கிழக்கு நிபுணர் பேட்டி

மராட்டியம் அர்ப்பணிப்புள்ள ஒரு தலைவரை இழந்து விட்டது: அஜித் பவார் மறைவுக்கு தெண்டுல்கர் இரங்கல்

தமிழகம் உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல்: 4ம் தேதி தேர்தல் ஆணையம் ஆலோசனை

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரை வளர்ச்சிக்கான பார்வை கொண்டது: துணை ஜனாதிபதி

அஜித் பவார் மரணம்; சரத் பவாரை தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி