தமிழக செய்திகள்

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற 6 பேர் கைது

காட்டாங்கொளத்தூர் அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற 6 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தினத்தந்தி

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பாக்கெட்டுகளை விற்ற அதே பகுதியை சேர்ந்த சீனிவாசன் (வயது 34), மறைமலைநகர் பகுதிகளில் புகையிலை பொருட்களை விற்பனை செய்த மறைமலைநகர் பகுதியை சேர்ந்த முருகேசன் (68), அரவிந்த் (29) ஆகியோரை மறைமலைநகர் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து குட்கா, புகையிலை பாக்கெட்டுகளை கைப்பற்றினர்.

கூடுவாஞ்சேரி அடுத்த தைலாவரம் பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் புகையிலைபொருட்களை விற்ற கணேஷ் (38) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து புகையிலை பொருட்களை கைப்பற்றினர். இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மண்ணிவாக்கம் பகுதியில் குட்கா, புகையிலை பொருட்களை விற்ற அசாம் மாநிலத்தை சேர்ந்த பகுருதீன் (24), மண்ணிவாக்கத்தை சேர்ந்த குஞ்சு மொய்தீன் (25) ஆகியோரை ஓட்டேரி போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து குட்கா, புகையிலை பொருட்களை கைப்பற்றினர். இது குறித்து ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து