தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பரும்பூர் பகுதியில் விற்பனைக்காக 600 கிராம் கஞ்சா வைத்திருந்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பரும்பூர் பகுதியில் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது பரும்பூர் பகுதியில் சந்தேகப்படும்படி 2 பைக்குகளில் வந்த 3 பேரை பிடித்து போலீசார் சோதனை செய்தனர். அதில் அவர்கள் சட்ட விரோதமாக விற்பனை செய்வதற்காக 600 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து ஓட்டப்பிடாரம் காவல் நிலைய இன்ஸ்பெகடர் கார்த்திக் வழக்குப்பதிவு செய்து விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த ஓட்டப்பிடாரம் நாகம்பட்டி பகுதியைச் சேர்ந்த சங்கரபாண்டி மகன் மகேஷ்குமார் (வயது 19), வ.உ.சி.காலனி பகுதியை சேர்ந்தவர்களான ராசுக்குட்டி மகன் அறிவுமதி(எ) அழகு(23), பாஸ்(எ) பாலமுருகன்(22) ஆகிய 3 பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து 600 கிராம் கஞ்சா மற்றும் 2 பைக்குகளை பறிமுதல் செய்தார்.