தமிழக செய்திகள்

650 கிலோ ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

650 கிலோ ரேஷன் அரிசி கடத்தியவர் கைது செய்யப்பட்டா.

தினத்தந்தி

ஈரோடு மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் புஞ்சைபுளியம்பட்டி அவினாசி பிரிவு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் காரை ஓட்டி வந்தவர் சத்தியமங்கலம் நேரு நகரை சேர்ந்த சதீஸ்குமார் (வயது 38) என்பதும், அவர் ரேஷன் அரிசியை கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தியதாக சதீஸ்குமாரை கைது செய்த போலீசார், 650 கிலோ ரேஷன் அரிசியையும், காரையும் பறிமுதல் செய்தனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்