தமிழக செய்திகள்

பணம் வைத்து சூதாடிய 7 பேர் சிக்கினர்

பணம் வைத்து சூதாடிய 7 பேர் சிக்கினர்.

சங்கராபுரம், 

சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான போலீசார் தேவபாண்டலம் சுடுகாடு அருகில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்த வடசிறுவள்ளூர் கிராமத்தை சேர்ந்த சுரேஷ் (வயது 40), ராஜ்குமார் (28) மற்றும் தேவபாண்டலம் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் (34), பிரகாஷ் (30), தயாநிதி (33), பத்ரிநாத் (23), அன்பரசன் (34), ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT