தமிழக செய்திகள்

கூடுதல் விலைக்கு மதுபானம் விற்ற டாஸ்மாக் ஊழியர்கள் 7 பேர் தற்காலிக பணி நீக்கம்

கூடுதல் விலைக்கு மதுபானம் விற்ற டாஸ்மாக் ஊழியர்கள் 7 பேர் தற்காலிக பணி நீக்கம்.

தினத்தந்தி

சென்னை,

டாஸ்மாக் சென்னை மண்டல முதுநிலை மண்டல மேலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, டாஸ்மாக் தலைமை அலுவலக மேலாண்மை இயக்குனர் உத்தரவின்பேரில் சென்னை அண்ணா நகர் பகுதியில் உள்ள 2 உயர் ரக மதுபான கடைகளில் அதிகபட்ச விலையை விட கூடுதலாக விலை வைத்து விற்கப்படுவதாக வந்த புகாரின் அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டது.

ஆய்வின்போது மதுபானங்கள் ரூ.20 முதல் ரூ.25 வரை கூடுதலாக விற்பனை செய்யப்பட்டதால் கடை பணியில் இருந்த 2 மேற்பார்வையாளர்கள் மற்றும் 5 கடை விற்பனையாளர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கூடுதல் விலை வைத்து விற்பனை செய்தால் துறை ரீதியான நடவடிக்கை கடுமையாக்கப்படும் என்று எச்சரிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை