தமிழக செய்திகள்

ரெயில்கள் மூலம் 7 ஆயிரம் டன் ஆக்சிஜன் வினியோகம்: தெற்கு ரெயில்வே தகவல்

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஆக்சிஜன் தேவை தமிழகத்தில் அதிகரிக்க தொடங்கிய நிலையில், தமிழக அரசு தெற்கு ரெயில்வேயின் உதவியால் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு ஆக்சிஜன் வினியோகம் செய்யப்படுகிறது.

தினத்தந்தி

அந்தவகையில் கடந்த மாதம் 14-ந் தேதி தமிழகத்துக்கு முதல் ஆக்சிஜன் ரெயில் வந்தது. இதையடுத்து தொடர்ந்து மேற்கு வங்காளம், ஒடிசா, மராட்டியம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆக்சிஜன் நிரப்பப்பட்ட ரெயில்கள் தண்டையார்பேட்டை, மதுக்கரை, மீளவிட்டான் போன்ற இடங்களுக்கு வருகின்றன. இந்தநிலையில் நேற்று 85-வது ஆக்சிஜன் ரெயில் ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் இருந்து சென்னை துறைமுகத்துக்கு 4 கண்டெய்னர்கள் மூலம் 74.04 டன் ஆக்சிஜன் கொண்டுவரப்பட்டது. இதுவரை தமிழகத்துக்கு 85 ரெயில்களில் தெற்கு ரெயில்வே மூலம் 6,549.59 டன் ஆக்சிஜன் வினியோகம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் கேரள மாநிலத்துக்கு 4 ரெயில்களில் 513.72 டன் ஆக்சிஜன் என இதுவரை தெற்கு ரெயில்வே 7 ஆயிரம் டன் ஆக்சிஜன் தமிழகம் மற்றும் கேரளாவுக்கு வினியோகிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்