அந்தவகையில் கடந்த மாதம் 14-ந் தேதி தமிழகத்துக்கு முதல் ஆக்சிஜன் ரெயில் வந்தது. இதையடுத்து தொடர்ந்து மேற்கு வங்காளம், ஒடிசா, மராட்டியம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆக்சிஜன் நிரப்பப்பட்ட ரெயில்கள் தண்டையார்பேட்டை, மதுக்கரை, மீளவிட்டான் போன்ற இடங்களுக்கு வருகின்றன. இந்தநிலையில் நேற்று 85-வது ஆக்சிஜன் ரெயில் ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் இருந்து சென்னை துறைமுகத்துக்கு 4 கண்டெய்னர்கள் மூலம் 74.04 டன் ஆக்சிஜன் கொண்டுவரப்பட்டது. இதுவரை தமிழகத்துக்கு 85 ரெயில்களில் தெற்கு ரெயில்வே மூலம் 6,549.59 டன் ஆக்சிஜன் வினியோகம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் கேரள மாநிலத்துக்கு 4 ரெயில்களில் 513.72 டன் ஆக்சிஜன் என இதுவரை தெற்கு ரெயில்வே 7 ஆயிரம் டன் ஆக்சிஜன் தமிழகம் மற்றும் கேரளாவுக்கு வினியோகிக்கப்பட்டுள்ளது.