தமிழக செய்திகள்

குன்றத்தூர் அருகே 7-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

குன்றத்தூர் அருகே 7-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தினத்தந்தி

குன்றத்தூரை அடுத்த பழந்தண்டலம் காந்தி தெருவை சேர்ந்தவர் கருணாகரன் (வயது 38), இவரது மனைவி நந்தினி. இவர்களது மகள் சொர்ணலட்சுமி (12). அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்தவர் வீட்டின் அருகிலேயே நடந்து வரும் டியூஷனுக்கு சென்று விட்டு இரவு வீட்டுக்கு வந்தார். பின்னர் கழிவறைக்கு சென்றவர் நீண்ட நேரம் ஆகியும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்து அவரது தாய் சென்று பார்த்தபோது சொர்ண லட்சுமி தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சொர்ணலட்சுமியை மீட்டு பார்த்தபோது அவர் இறந்து போனது தெரிய வந்தது. இது குறித்து குன்றத்தூர் போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சொர்ணலட்சுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்