தமிழக செய்திகள்

தனியார் பல்கலைக்கழகம் அருகே சிகரெட் விற்ற 8 பேர் கைது

மறைமலை நகர் தனியார் பல்கலைக்கழகம் அருகே சிகரெட் விற்ற 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட தனியார் பல்கலைக்கழகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் சிகரெட் பாக்கெட்டுகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து பொத்தேரியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தை சுற்றி உள்ள கடைகளில் போலீசார் ஆய்வு செய்தபோது சிகரெட் பாக்கெட்டுகள் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் சிகரெட் பாக்கெட்டுகளை கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்த பொத்தேரி பகுதியை சேர்ந்த ராமசுப்பு (வயது 52), சாய் மீரசாந்த் (26), கன்னியப்பன் (50), செல்வம் (48), விஸ்வநாதன் (37), கோவர்த்தனன் (47), தருண் (22), தயாளன் (50) ஆகியோரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து தடை செய்யப்பட்ட சிகரெட் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு