தமிழக செய்திகள்

வேலூர் மத்திய சிறையில் இருந்து 8 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை

வேலூர் மத்திய சிறையில் இருந்து இதுவரை 33 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

தினத்தந்தி

வேலூர்,

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி, தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் நீண்ட காலமாக தண்டனை அனுபவிக்கும் கைதிகள் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர்.

அதன்படி வேலூர் மத்திய சிறையில் இருந்து இதுவரை 33 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ஒரு பெண் உட்பட 8 ஆயுள் தண்டனை கைதிகள் வேலூர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். அவர்களின் முன்விடுதலைக்கான ஆணை மற்றும் சிறையில் செய்த வேலைக்கான ரூ.5.69 லட்சம் ஊதியம் ஆகியவற்றை வேலூர் சிறை கண்காணிப்பாளர் அப்துல் ரகுமான் வழங்கினார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து