தமிழக செய்திகள்

கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 8 கொலைகள்: சட்டம் ஒழுங்கு முற்றிலும் செயலிழப்பு - கனிமொழி எம்.பி.

என்ன செய்துகொண்டிருக்கிறது அரசு? தமிழ்நாட்டில் காவல்துறை செயல்படுகிறதா? எனவும் கனிமொழி எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை,

ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டில் கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போவதாக கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.

24 மணிநேரத்தில் 8 கொலைகள்

இது தொடர்பாக தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் தமிழ்நாட்டில் 8 கொலைகள் நடந்துள்ளதாகச் செய்திகள் வெளிவந்திருக்கின்றன. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் செயலிழந்துபோயுள்ளது என்பதற்கு இந்தக் கொலைகள்தான் சாட்சி.

காவல்துறை செயல்படுகிறதா?

ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டில் கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. தமிழ்நாட்டின் Growth Rate-ஐ உயர்த்துவார்கள் என நம்பி வாக்களித்த மக்களுக்கு, தினமும் Crime Rate -ஐ உயர்த்தி தண்டனை கொடுத்துக் கொண்டிருக்கிறது தவெக அரசு.

தமிழ்நாட்டில் மக்களின் பாதுகாப்பு அன்றாடம் கேள்விக்குறியாகிக் கொண்டிருக்கும்போது, என்ன செய்துகொண்டிருக்கிறது தமிழ்நாடு அரசு? தமிழ்நாட்டில் காவல்துறை செயல்படுகிறதா? இல்லை அதுவும் முதல்-அமைச்சரைப் போல் ஓய்வில்தான் இருக்கிறதா?

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT