சென்னை,
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதற்காக கூடுதல் தடுப்பூசிகளை உடனடியாக வழங்கும்படி தமிழக அரசு விடுத்த கோரிக்கையை ஏற்று மத்திய அரசும் தமிழகத்துக்கு தடுப்பூசிகளை அனுப்பி வருகிறது.
அதன்படி தமிழகத்துக்கு இதுவரை மத்திய தொகுப்பில் இருந்தும், தமிழக அரசின் நேரடி கொள்முதல் மூலமாகவும் 83 லட்சத்து 39 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகளும், 13 லட்சத்து 40 ஆயிரம் கோவேக்சின் தடுப்பூசிகளும் வந்து உள்ளன.
இந்தநிலையில் ஐதராபாத்தில் இருந்து 82 ஆயிரம் கோவேக்சின் தடுப்பூசிகள் விமானத்தில் சென்னை வந்தது. 16 பார்சல்களில் வந்த தடுப்பூசிகளில் 10 பார்சல்கள் இருந்த 51 ஆயிரம் தடுப்பூசிகள் பெரியமேட்டில் உள்ள மத்திய சேமிப்பு கிடங்கிற்கும், மீதம் உள்ள 31 ஆயிரம் தடுப்பூசிகள் தேனாம்பேட்டையில் உள்ள மாநில அரசின் கிடங்கிற்கும் சுகாதாரத் துறை அதிகாரிகள் எடுத்து சென்றனா. அங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பிரித்து அனுப்பப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.