தமிழக செய்திகள்

குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு: தேனி ஆட்சியர் பல்லவி பல்தேவ் தகவல்

குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளனர் என தேனி ஆட்சியர் பல்லவி பல்தேவ் தகவல் தெரிவித்துள்ளார். #KuranganiForestFire

தேனி,

தேனி மாவட்டம், போடி அருகே குரங்கணி வனப்பகுதியில் சுமார் 2 ஆயிரம் அடி உயரம் கொண்ட டாப்ஸ்டேசன் மலைப்பகுதி உள்ளது. குரங்கணியில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் வனப்பகுதி அமைந்துள்ளது. சுற்றுலாவுக்காக இங்கு அதிகம் பேர் வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் குரங்கணி வனப்பகுதியில் நேற்று பிடித்த தீயில் சுற்றுலா சென்ற 39 பேர் சிக்கிக்கொண்டனர். வனப்பகுதியில் சிக்கியவர்களை மீட்க போர் கால அடிப்படையில் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. இதுவரை ஆண், பெண் மற்றும் குழந்தைகள் உள்பட 27 பேர் மீட்கப்பட்டு உள்ளனர் என அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

இந்த காட்டுத்தீயில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளனர். மலையேற சென்றவர்கள் காட்டுத்தீயில் சிக்கி கொண்டனர் என தேனி ஆட்சியர் பல்லவி பல்தேவ் தெரிவித்துள்ளார். இதுவரை மீட்கப்பட்ட 27 பேரில் 10 பேருக்கு எந்த காயமும் இல்லை. பலியானவர்களில் 6 பேர் பெண்கள்.

காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்த 9 பேரில் 6 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என்றும் மற்றும் 3 பேர் ஈரோட்டை சேர்ந்தவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...