தமிழக செய்திகள்

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்: 97,831 பேர் வேட்புமனுக்கள் தாக்கல் - மாநில தேர்தல் ஆணையம்

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு மொத்தம் 97,831 பேர் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தென்காசி, கள்ளக்குறிச்சி, நெல்லை, விழுப்புரம் மற்றும் வேலூர் ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் 6-ந்தேதி, 9-ந்தேதிகளில் என 2 கட்டங்களாக நடைபெற உள்ளது.

ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15-ந்தேதி தொடங்கியது. ஒவ்வொரு நாளும் அரசியல் கட்சியினர் ஆர்வமுடன் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்து வந்தனர். வேட்புமனு தாக்கல் செய்ய கடைசிநாளான நேற்று, அரசியல் கட்சியினர், சுயேச்சை வேட்பாளர்கள் என வேட்புமனு தாக்கல் செய்ய ஏராளமானோர் ஆர்வம் காட்டினர்.

நேற்று ஒரே நாளில் மட்டும் தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கானோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். ஒட்டுமொத்தமாக வேட்பு மனு தாக்கல் செய்தவர்கள் எண்ணிக்கை விவரம் இன்று (வியாழக்கிழமை) அதிகாரபூர்வமாக வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்தநிலையில் தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கு மொத்தம் 97,831 பேர் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

பதவி வாரியாக வேட்புமனுக்கள் விவரம்:-

* கிராம ஊராட்சித் தலைவர் - 15,967 பேர் வேட்பு மனுக்கள் தாக்கல்

* கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் - 72,071 பேர் வேட்பு மனுக்கள் தாக்கல்

* மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் - 1,122 பேர் வேட்பு மனுக்கள் தாக்கல்

* ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் - 8,671 பேர் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.

வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெறுகிறது. வேட்புமனு திரும்பப்பெற நாளை மறுநாள் (சனிக்கிழமை) கடைசிநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...