தமிழக செய்திகள்

பிளஸ்-1 பொதுத்தோவில் அரியலூரில் 93.06 சதவீதம் பேர் தேர்ச்சி

பிளஸ்-1 பொதுத்தோவில் அரியலூரில் 93.06 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.

தினத்தந்தி

அரியலூர் 93.06 சதவீதம் தேர்ச்சி

அரியலூர் மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வினை 87 பள்ளிகளை சேர்ந்த 4 ஆயிரத்து 439 மாணவர்களும், 4 ஆயிரத்து 688 மாணவிகளும் என மொத்தம் 9 ஆயிரத்து 127 பேர் தேர்வு எழுதினர். இதில் 3 ஆயிரத்து 979 மாணவர்களும், 4 ஆயிரத்து 515 மாணவிகளும் என மொத்தம் 8 ஆயிரத்து 494 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி 93.06 சதவீதம் ஆகும். இதில் மாணவர்கள் 89.64 சதவீத தேர்ச்சியும், மாணவிகள் 96.31 சதவீத தேர்ச்சியும் பெற்றுள்ளனர்.

9-வது இடத்துக்கு முன்னேறிய அரியலூர்

கடந்த 2020-ம் ஆண்டு பிளஸ்-1 அரசு பொதுத்தேர்வில் மாநில அளவில் தேர்ச்சி தரவரிசை பட்டியலில் அரியலூர் மாவட்டம் 12-வது இடத்தை பிடித்திருந்தது. தற்போது மாநில அளவில் 3 இடம் முன்னேறி அரியலூர் மாவட்டம் 9-வது இடத்தை பிடித்துள்ளதால் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள், ஆசிரியர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து