தமிழக செய்திகள்

தமிழ்நாட்டில் 48 மணி நேரம் நடைபெற்ற "சாகர் கவாச்" பாதுகாப்பு ஒத்திகைப் பயிற்சி

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிராக பல்வேறு பாதுகாப்புப் படைகள் பங்கேற்ற சாகர் கவாச் என்ற பாதுகாப்பு ஒத்திகைப் பயிற்சி நடைபெற்றது.

தினத்தந்தி

சென்னை,

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிராக பல்வேறு பாதுகாப்புப் படைகள் பங்கேற்ற சாகர் கவாச் என்ற பாதுகாப்பு ஒத்திகைப் பயிற்சி நடைபெற்றது.

மாநில அரசின் மேற்பார்வையில் இந்திய கடலோர காவல்படையின் கிழக்கு பிராந்திய தலைமை தளபதியால் ஒருங்கிணைக்கப்பட்டு நடத்தப்பட்டது. இதில் தமிழக காவல்துறை சார்பாக காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திர பாபு, கலந்துகொண்டார்.

தமிழகம் மற்றும் புதுரை கடல் சார் மாநிலமாக இருப்பதால் இந்த பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. இந்த ஒத்திகையில் கடலோர பாதுகாப்பு குழுமம், 14 கடலோர மாவட்ட காவல்துறையினர், மத்திய தொழிற் பாதுகாப்பு படை, தேசிய பாதுகாப்பு படை உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு அமைப்புகள் கலந்துகொண்டன.

இந்த ஒத்திகையின் போது கப்பல் கடத்தப்படுதல், கப்பலில் இருந்து பினைக்கைதிகள் மீட்கப்படுதல் உள்ளிட்ட அனைத்து வகையான பாதுகாப்பு நடைமுறைகளும் ஒத்திகை பார்க்கப்பட்டன. இரு நாட்கள் நடைபெற்ற இந்த பயிற்சி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்