தமிழக செய்திகள்

சரக்கு வாகனம் மோதி வாலிபர் பலி

சின்னசேலம் அருகே சரக்கு வாகனம் மோதியதில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

தினத்தந்தி

சின்னசேலம்,

சேலம் மாவட்டம் தலைவாசல் அடுத்த கோவிந்தம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜி மகன் வீரபாண்டியன் (வயது 26). இவர் சின்னசேலம் அருகே ஈசாந்தை கிராமத்தில் உள்ள தனது மாமியார் வீட்டில் மனைவியை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார். சின்னசேலம் எல்லை அருகே சென்றபோது அந்த வழியாக வேகமாக வந்த சரக்குவாகனம் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த வீரபாண்டியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் விபத்து தொடர்பாக சரக்கு வாகன டிரைவரான சின்னசேலம் அடுத்த கூகையூர் கிராமத்தை சேர்ந்த ராஜதுரை (26) என்பவரை சின்னசேலம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்