தமிழக செய்திகள்

பயணிகளுடன் பள்ளத்தில் பாய்ந்த பஸ் -திருச்சுழி அருகே பரபரப்பு

திருச்சுழி அருகே தனியார் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

தினத்தந்தி

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையத்திலிருந்து 50 க்கும் மேற்பட்ட பயணிகளுடன் தனியார் பேருந்து ஒன்று மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தது.

இந்த பேருந்து திருச்சுழியருகே தமிழ்ப்பள்ளி எனும் பகுதியில் சென்று கொண்டு இருந்தது. அப்போது ஒரு லாரி ஒன்று சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்தது. இது தனக்கு முன்னாள் சென்று கொண்டிருந்த வாகனத்தை முந்தி செல்ல முயன்றது. இதனால்  பேருந்தை மோதுவது போல் லாரி வந்தது.இதனை கண்ட பேருந்து ஓட்டுநர் சாலையோரம் ஒதுங்கச்சென்றார். ஆனால் நேற்று பெய்த கன மழையால் சாலை ஓரம் உள்ள மண் சரிந்து விழுந்தது.இதனால் பேருந்து நிலை தடுமாறி சாலையின் ஓரத்தில் கவிழ்ந்தது உருண்டு சென்றது.

இதில் பேருந்தில் இருந்த பயணிகளில் கர்ப்பிணி உட்பட 10 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்க அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டுவருகிறது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்