தமிழக செய்திகள்

சாலையோரத்தில் இறைச்சி கழிவுகளை கொட்டிய சரக்கு வேன் பறிமுதல்

சாலையோரத்தில் இறைச்சி கழிவுகளை கொட்டிய சரக்கு வேன் பறிமுதல் செய்யப்பட்டது.

தினத்தந்தி

ஜீயபுரம்:

திருச்சி மாநகரில் ஏராளமான உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த உணவகங்களில் மிஞ்சக்கூடிய கோழி இறைச்சி கழிவுகள் மற்றும் உணவுகள் போன்றவற்றை இரவு நேரத்தில் ஒரு சரக்கு வாகனத்தில் ஏற்றி வந்து, திருச்சி அருகே உள்ள பழூர் சாலையோரத்தில் கொட்டிவிட்டு செல்கின்றனர். இதனால் திருச்சி-கரூர் செல்லும் இந்த முக்கியமான சாலையில் மிகுந்த துர்நாற்றம் வீசுகிறது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு ஜீயபுரம் தனிப்பிரிவு போலீசார், அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு சரக்கு வேனில் கோழி இறைச்சி மற்றும் மீதமான உணவுகளை கொண்டு வந்து சாலையோரத்தில் கொட்டுவதை கண்ட போலீசார், அந்த சரக்கு வேனில் வந்தவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதையடுத்து சரக்கு வேனை பறிமுதல் செய்து ஜீயபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சசிகுமாரிடம் ஒப்படைத்தனர். மேலும் சரக்கு வேனில் எந்தெந்த பகுதியில் இருந்து கழிவுகளை சேகரித்து, இங்கு வந்து கொட்டப்படுகிறது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு