தமிழக செய்திகள்

சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

திருவள்ளூரில் சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

தினத்தந்தி

திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று தமிழக முதல்-அமைச்சரின் தலைமையில் வருகிற ஆகஸ்டு 10-ந் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் கலந்து கொள்ளும் போதை பொருள் தடுப்பு மாநாடு குறித்தும், வருகிற 15-ந் தேதி நடைபெற உள்ள சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வுகள் குறித்தும் அனைத்து துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பா.சீபாஸ் கல்யாண் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் அசோகன் மற்றும் பல்வேறு துறையை சேர்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்