தமிழக செய்திகள்

மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியை அமைக்க வேண்டும்

கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கான மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியை அமைக்க வேண்டும் சட்டசபையில் வசந்தம் கார்த்திகேயன் கோரிக்கை

தினத்தந்தி

கள்ளக்குறிச்சி 

தமிழக சட்டசபையில் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் பேசியதாவது:- விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு என கள்ளக்குறிச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இல்லாத ஒரு நிலை உள்ளது. 86 கூட்டுறவு சங்கங்களும், 2 கூட்டுறவு சர்க்கரை ஆலைகளும் உள்ள நிலையில் அலுவல் ரீதியாக அனைத்துக்கும் 100 கிலோமீட்டர் பயணம் செய்து விழுப்புரத்துக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கான மத்திய கூட்டுறவு வங்கியை அமைத்து தர வேண்டும்.

மணலூர்பேட்டையில் உள்ள தொடக்க கூட்டுறவு கடன் சங்கம் மூலம் வழங்கப்பட்டுள்ள ரூ.8 கோடி விவசாய கடனில் ரூ.5 கோடி கொங்கணாமூர் மற்றும் முருக்கம்பாடி ஊராட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேற்படி 2 கிராமங்களில் சுமார் 5 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்ற நிலையில் சுமார் 530 ஹெக்டர் பரப்பளவில் 100 சதவீதம் விவசாயம் இங்கு நடைபெறுகிறது.

எனவே மணலூர்பேட்டை அருகே உள்ள முருக்கம்பாடி கிராமத்தில் புதியதாக தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் அமைக்க வேண்டும். இதன் மூலம் விவசாய கடன், உரங்கள் பெறுவது என பல்வேறு வகைகளில் விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இ்வ்வாறு அவர் கூறினார். 

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு