தமிழக செய்திகள்

மினிவேன் மோதி விவசாயி, பசுமாடு சாவு

கண்ணமங்கலம் அருகே மினிவேன் மோதி விவசாயி பரிதாபமாக இறந்தார். பசுமாடும் இறந்தது.

கண்ணமங்கலம்

கண்ணமங்கலம் அருகே மினிவேன் மோதி விவசாயி பரிதாபமாக இறந்தார். பசுமாடும் இறந்தது.

மினிவேன் மோதியது

கண்ணமங்கலம் அருகே அய்யம்பாளையம் காந்தி நகர் மாரியம்மன் கோவில் தெருவை சேந்தவர் முனுசாமி (வயது 68), விவசாயி.

இந்த நிலையில் இன்று காலை 6.20 மணி அளவில் முனுசாமி தனது பசுமாட்டை மேய்ச்சலுக்காக விவசாய நிலத்துக்கு ஓட்டி சென்றார்.

அப்போது திருவண்ணாமலையில் இருந்து வேலூர் நோக்கி அய்யம்பாளையம் காந்திநகர் சி.சி. ரோடு செல்லும் சாலையில் மினிவேன் வந்தது. திடீரென மினிவேன் முனுசாமி மற்றும் பசுமாடு மீது மோதியது.

விவசாயி சாவு

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த முனுசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பசுமாடும் இறந்தது.

விபத்து ஏற்படுத்திய மினிவேன் நிற்காமல் சென்று விட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த கண்ணமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய மினிவேன் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு