தமிழக செய்திகள்

பழைய வண்ணாரப்பேட்டையில் தனியார் பள்ளியில் தீ விபத்து

பழைய வண்ணாரப்பேட்டையில் தனியார் பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டது.

தினத்தந்தி

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை ஜி.ஏ. ரோட்டில் தனியார் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை 1,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள். தற்போது 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு மின்கசிவால் இந்த பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டது. வகுப்பறையில் உள்ள மின்பெட்டியில் தீப்பிடித்து எரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த காவலாளி சண்முகம் உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் முதலில் மின்சாரத்தை துண்டித்தனர். பின்னர் தீயை அணைத்தனர்.

தற்போது பொதுத்தேர்வு நடப்பதால் உடனடியாக தீயில் எரிந்த மின்சாதன பொருட்களை மாற்றி புதிய மின்சாதன பொருட்கள் பொருத்தப்பட்டது. தீ விபத்து குறித்து ராயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து