தமிழக செய்திகள்

பெற்றோர் செல்போன் வாங்கி தராததால் சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை

எர்ணாவூரில் பெற்றோர் செல்போன் வாங்கி தராததால் சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தினத்தந்தி

எர்ணாவூர் ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர் கோபி. கூலி தொழிலாளி. இவருடைய மகள் ஷாலினி (வயது 14). இவர், அருகில் உள்ள துணிக்கடையில் வேலை பார்த்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஷாலினி தனது பெற்றோரிடம் செல்போன் வாங்கி தருமாறு கேட்டார்.

அதற்கு அவர்கள், வீட்டில் கடன் பிரச்சினை இருப்பதால் தற்போது செல்போன் வாங்கி தர முடியாது என மறுத்தனர். இதனால் மனமுடைந்த ஷாலினி கடந்த 3 நாட்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று பெற்றோர் வெளியே சென்றிருந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த ஷாலினி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி எண்ணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை