தமிழக செய்திகள்

புதுக்கடை அருகே சூறைக்காற்றில் மரம் விழுந்து வீடு சேதம்

புதுக்கடை அருகே சூறைக்காற்றில் மரம் விழுந்து வீடு சேதம் அடைந்தது.

தினத்தந்தி

புதுக்கடை:

புதுக்கடை சுற்றுவட்டார பகுதியில் நேற்று முன்தினம் பலத்த சூறைக்காற்று வீசியது. இதில் புதுக்கடை அருகே பொன்னன்விளையை சேர்ந்த நடராஜன் என்பவர் வீட்டின் அருகில் நின்ற ஒரு மரம் வேரோடு சாய்ந்து வீட்டின் மீது விழுந்தது. அப்போது வீட்டில் இருந்த நடராஜனின் மனைவி மற்றும் குழந்தைகள் அலறி அடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடினர். இதனால் அவர்கள் காயமின்றி உயிர் தப்பினர். ஆனால் மரம் விழுந்ததில் அவர்களின் ஓட்டு வீடு சேதம் அடைந்தது. சேதமடைந்த வீட்டுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

---

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்