தமிழக செய்திகள்

மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் தொழிலாளி கட்டையால் அடித்துக் கொலை

மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் தொழிலாளி கட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 3 பேர் கொண்ட கும்பலை போலீஸ் தேடி வருகிறது.

தினத்தந்தி

கட்டையால் தாக்குதல்

சென்னை தரமணி பகுதியை சேர்ந்தவர் ஞானவேல் (வயது 38). கூலித்தொழிலாளி. இவர் நேற்று தரமணி ரெயில் நிலையம் அருகே பாலத்தின் கீழ் மது அருந்திக் கொண்டு இருந்ததாக தெரிகிறது. அப்போது அதே இடத்தில் பெருங்குடி கல்லுக்குட்டை பகுதியை சேர்ந்த மர்மநபர்கள் 3 பேர் மது அருந்திக் கொண்டு இருந்தனர். அப்போது ஞானவேலுக்கும், மதுஅருந்தி கொண்டு இருந்த மர்மகும்பலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. உடனே அந்த கும்பல் ஞானவேலை சரமாரியாக கட்டையால் தாக்கியது.

கொலை

இதில் பலத்த காயமடைந்த ஞானவேலை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்சில் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆஸ்பத்திரியில் ஞானவேலை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து அறிந்த தரமணி போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனி சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த தரமணி போலீசார் ஞானவேலை அடித்து கொன்ற 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்