தமிழக செய்திகள்

பள்ளிப்பட்டு அருகே சிமெண்டு மூட்டைகளை ஏற்றி வந்த லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

பள்ளிப்பட்டு அருகே சிமெண்டு மூட்டைகளை ஏற்றி வந்த லாரி பாரம் தாங்காமல் பள்ளத்தில் கவிழ்ந்தது.

தினத்தந்தி

பள்ளிப்பட்டு அருகே வெங்கம் பேட்டை காலனி அருகே பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதற்காக மண்ணால் மாற்றுப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை வழியாக நேற்று ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் இருந்து சிமெண்டு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு டாரஸ் லாரி வந்து கொண்டு இருந்தது. அப்போது லாரியின் பாரம் தாங்காமல் மண் சாலை சரிந்ததால் லாரி சிமெண்ட் மூட்டைகளுடன் பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரி டிரைவர் விஜயகுமார் சிறுகாயத்துடன் உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து பள்ளிப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது