தமிழக செய்திகள்

மின்சாரம் தாக்கி உயிருக்குப் போராடிய குரங்கு - மீட்டு காப்பாற்றிய மக்கள் - நெகிழ்ச்சி வீடியோ

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி ஆபத்தான நிலையில் இருந்த குரங்குக்கு பொதுமக்கள் முதலுதவி செய்த வீடியோ சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.

தினத்தந்தி

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் மின்சாரம் தாக்கி ஆபத்தான நிலையில் இருந்த குரங்குக்கு பெதுமக்கள் முதலுதவி செய்தனர். இந்த வீடியே சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.

வனப்பகுதியில் இருந்து வெளியேறிய குரங்கு ஒன்று தேன்கனிக்கோட்டை காந்தி சாலையில் கோயில் அருகே மின்சார வயரில் தொங்கி விளையாடியது. அப்பேது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி அதன் கை, கால் பகுதிகளில் தீப்புண் ஏற்பட்டது.

இதனால் படுகாயம் அடைந்த குரங்குக்கு பெதுமக்களே மருந்துகள் பூசினர். பின்னர், வனத்துறை அலுவலகத்திற்கு சென்று சிகிச்சை அளிக்க கேரி பெதுமக்கள் முறையிட்டனர். வன ஊழியர்கள் அக்குரங்கை பிடித்து சிகிக்சை அளித்து வருகின்றனர். குரங்குக்கு சிகிச்சை அளிக்கும் வீடியே சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு