தமிழக செய்திகள்

ஓடும் ரெயிலில் இருந்து இறங்க முயன்ற பயணி: ரெயிலுக்கு இடையே சிக்கி கொண்டதால் பரபரப்பு

திருச்சியில் ரெயில் புறப்பட்ட போது ஏற முயன்ற பயணி தடுமாறி கீழே விழுந்து ரெயிலுக்கு இடையே சிக்கிக் கொண்டார்.

தினத்தந்தி

திருச்சி,

திருச்சி சந்திப்பு ரெயில் நிலையத்தில், ரெயில் நிற்பதற்கு முன்பாக இறங்கிய ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியரான ஜெயச்சந்திரன் என்பவர் ரெயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே சிக்கினார்.

இதனைக்கண்ட ரெயில்வே போலீசாரும், பொதுமக்களும் காயமடைந்த அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். ரெயில் உடனடியாக நிறுத்தப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

சிறு காயங்களுடன் மீட்கப்பட்ட ரெயில்வே ஊழியர், தற்போது நலமுடன் இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்