தமிழக செய்திகள்

அனுமதியின்றி லாரியில் ஜல்லி கல் ஏற்றி வந்தவர் கைது

திசையன்விளையில் அனுமதியின்றி லாரியில் ஜல்லி கல் ஏற்றி வந்தவர் கைது செய்யப்பட்டார்.

திசையன்விளை:

திசையன்விளை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ், பயிற்சி சப்- இன்ஸ்பெக்டர் தனசேகர் மற்றும் போலீசார் நேற்று மன்னார்புரம்-வள்ளியூர் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக அரசு அனுமதியின்றி லாரியில் ஜல்லி கல் கடத்தி வந்த வடக்கு விஜயநாராயணம் சிவன் கோவில் தெருவை சேர்ந்த மாடசாமி (வயது 55) என்பவரை கைது செய்தனர். பின்னர் ஜல்லி கல்லுடன் லாரியை பறிமுதல் செய்தனர்.

SCROLL FOR NEXT