தமிழக செய்திகள்

நுங்கம்பாக்கத்தில் பாதாள அறையில் ஹூக்கா பார் நடத்திய ஆசாமி கைது

நுங்கம்பாக்கத்தில் பாதாள அறையில் ஹூக்கா பார் நடத்திய ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

சென்னை நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு கட்டிடத்தில் பாதாள அறையில் தடை செய்யப்பட்ட ஹூக்கா போதைப்பொருள் பார் செயல்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. நுங்கம்பாக்கம் போலீஸ் உதவி கமிஷனர் ரவி அபிராம், இன்ஸ்பெக்டர் சேட்டு ஆகியோர் போலீஸ் படையுடன் சென்று குறிப்பிட்ட ஹூக்கா பாரில் அதிரடி சோதனை நடத்தி, உரிய பொருட்களை பறிமுதல் செய்தனர்.

ஹூக்கா பாரை நடத்திய முஸ்தாக்அகமது (வயது 51) என்ற ஆசாமி கைது செய்யப்பட்டார். அவர் ஏற்கனவே பல முறை கைதாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஹூக்கா பாரில், வழக்கமாக வரும் வாடிக்கையாளர்களை மட்டும் அனுமதிப்பார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஹூக்கா பாருக்கு 'சீல்' வைக்கப்பட்டது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து