தமிழக செய்திகள்

சரியாக படிக்கவில்லை என பெற்றோர் கண்டித்ததால் பிளஸ்-1 மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை

அரும்பாக்கத்தில் சரியாக படிக்கவில்லை என பெற்றோர் கண்டித்ததால் பிளஸ்-1 மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தினத்தந்தி

சென்னை அரும்பாக்கம், வள்ளுவர் சாலையை சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ். கூலி தொழிலாளி. இவருடைய மகன் அந்தோணி தினேஷ் (வயது 16). இவர், அங்குள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

நேற்று முன்தினம் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த அந்தோணி தினேசை, சரியாக படிக்கவில்லை என அவரது பெற்றோர் கண்டித்ததாக தெரிகிறது. இதனால் விரக்தி அடைந்த அந்தோணி தினேஷ், தனது பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்