தமிழக செய்திகள்

அதிகபட்சமாக ஒரு குவிண்டால் பருத்தி ரூ.7ஆயிரத்து 329-க்கு விற்பனை

திருவாரூரில் நடந்த ஏலத்தில் அதிகபட்சமாக ஒரு குவிண்டால் பருத்தி ரூ.7ஆயிரத்து329-க்கு விற்பனையானது.

தினத்தந்தி

திருவாரூர்;

திருவாரூரில் நடந்த ஏலத்தில் அதிகபட்சமாக ஒரு குவிண்டால் பருத்தி ரூ.7ஆயிரத்து329-க்கு விற்பனையானது.

பருத்தி ஏலம்

திருவாரூர் மாவட்டத்தில் பருத்தி சாகுபடி நடைபெற்ற நிலையில், தற்போது பருத்தி பஞ்சுகள் அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. விவசாயிகள் அறுவடை செய்த பருத்தி பஞ்சுகளை ஒழுங்கு முறை விற்பனை கூடங்கள் மூலம் மறைமுக ஏலத்தில் விற்பனை செய்து வருகின்றனர். அதன்படி திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்தில் பருத்தி பஞ்சுகளை விவசாயிகள் ஏலத்துக்கு வைத்திருந்தனர்.

அதிக பட்ச விலை

இந்த ஏலத்தில் கும்பகோணம், பண்ருட்டி, செம்பனார்கோவில், உள்ளிட்ட வெளி மாவட்ட வியாபாரிகள் கலந்து கொண்டனர். அப்போது விவசாயிகள் கொண்டு வந்த பருத்தியை பார்வையிட்டு, தாங்கள் கேட்கும் தொகையை ஏலச் சீட்டில் எழுதி பெட்டியில் போட்டனர். இதைத்தொடர்ந்து திருவாரூர் விற்பனைக்குழு செயலாளர் ரமேஷ் தலைமையில், கண்காணிப்பாளர் கிருஷணமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் ஏலப்பெட்டியை திறந்து வியாபாரிகள் கேட்ட விலையை படித்தனர். இதில் அதிகபட்சமாக பருத்தி ஒரு குவிண்டாலுக்கு ரூ.7 ஆயிரத்து 329-க்கும் குறைந்தபட்சமாக ஒரு குவிண்டால் பருத்தி ரூ.5 ஆயிரத்து 809-க்கும் விலை போனது.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு