தமிழக செய்திகள்

கண்ணில் கண்டவரை எல்லாம் வெறிப்பிடித்து கடித்த நாய் - சிறுவர்கள் உட்பட 20 பேர் காயம்

ஆண்டிப்பட்டி அருகே வெறிநாய் கடித்ததில், சிறுவர்கள் உட்பட 20 பேர் காயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தினத்தந்தி

ஆண்டிப்பட்டி,

ஆண்டிப்பட்டி அருகே வெறிநாய் கடித்ததில், சிறுவர்கள் உட்பட 20 பேர் காயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தேனி மாவட்டம், கொண்டமநாயக்கன்பட்டி குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரிந்த தெருநாய் ஒன்று திடீரென வெறிபிடித்து அந்த வழியாக செல்வோரை கடிக்க தொடங்கியது. தெருக்களில் அங்குமிங்கும் ஓடிய அந்த நாய் கண்ணில் கண்டவரை எல்லாம் கடிக்க தொடங்கியது.

இதில் 6 சிறுவர்கள் உள்பட 20 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் ரத்தகாயங்களுடன் ஆண்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து