தமிழக செய்திகள்

பள்ளி மாணவனை கடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு சென்ற உறவினர் - மருத்துவர்கள் அதிர்ச்சி

பள்ளி மாணவனை பாம்பு கடித்த நிலையில், அவரது உறவினர் பாம்பை அடித்து மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தினத்தந்தி

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் சென்னப்பநாயக்கனூர் பகுதியில் பள்ளி மாணவனை பாம்பு கடித்த நிலையில், அவரது உறவினர் பாம்பை அடித்து மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

மாணவர் கோகுல் வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது விஷப்பாம்பு அவரை கடித்துள்ளது. அலறி அடித்து ஓடிய மாணவனை, அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அப்போது கோகுலின் உறவினர் ஒருவர், கடித்த பாம்பை அடித்து பையில் போட்டுக்கொண்டு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை