தமிழக செய்திகள்

தேங்காய் குடோனுக்குள் புகுந்த பாம்பு

போடியில் உள்ள தேங்காய் குடோனுக்குள் பாம்பு புகுந்தது.

போடியில், தேனி சாலையில் உள்ள ஒரு தேங்காய் குடோனில் நேற்று காலை பாம்பு ஒன்று புகுந்தது. இதனைக்கண்ட ஊழியர்கள், இதுகுறித்து போடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் நிலைய அலுவலர் பழனி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்றனர். சுமார் மணி நேரம் போராடி, அந்த பாம்பை தீயணைப்பு படையினர் பிடித்தனர். இது, சுமார் 5 அடி நீள சாரைபாம்பு ஆகும். அந்த பாம்பு, வனப்பகுதியில் விடப்பட்டது.

SCROLL FOR NEXT