தமிழக செய்திகள்

நமச்சிவாயபுரத்திற்கு தார் சாலை அமைக்க வேண்டும்

பெ.புதுப்பட்டியில் இருந்து நமச்சிவாயபுரத்திற்கு தார் சாலை அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினத்தந்தி

காரியாபட்டி

பெ.புதுப்பட்டியில் இருந்து நமச்சிவாயபுரத்திற்கு தார் சாலை அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விளை பொருட்கள்

காரியாபட்டி தாலுகா பெ.புதுப்பட்டி கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் இருந்து நமச்சிவாயபுரம், பந்தனேந்தல், ஜோகில்பட்டி, கல்குறிச்சி, அருப்புக்கோட்டை ஆகிய பகுதிகளுக்கு செல்ல வேண்டுமானால் 7 கி.மீ. தூரம் கிருஷ்ணாபுரம் வழியாக தான் செல்ல வேண்டும்.

மேலும் பெ.புதுப்பட்டி கிராமத்தில் விளையும் விளை பொருட்களை விற்பனை செய்ய வேண்டும் என்றால் அருப்புக்கோட்டை அல்லது விருதுநகருக்கு தான் கொண்டு செல்ல வேண்டும்.

சாலை வேண்டும்

விவசாய பொருட்களை எடுத்துச் செல்வதற்கு ஏதுவாக பெ.புதுப்பட்டி கிராமத்தில் இருந்து குண்டாற்றின் வழியாக பாலம் அமைத்து தார் சாலை அமைத்தால் 1 கி.மீ. தூரத்தில் நமச்சிவாயபுரம் கிராமம் வழியாக அருப்புக்கோட்டை, விருதுநகர் செல்ல முடியும்.

மேலும் பல்வேறு கிராமங்களையும் இணைக்கும் சாலையாகவும் அமையும். ஆதலால் விவசாயிகள், பொதுமக்கள் நலன் கருதி குண்டாற்று பகுதியில் பாலம் அமைத்து தார் சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்