தமிழக செய்திகள்

வாடிப்பட்டி அருகே கிணற்றில் தவறி விழுந்து ஆசிரியர் பலி

வாடிப்பட்டி அருகே கிணற்றில் தவறி விழுந்து ஆசிரியர் பரிதாபமாக இறந்தார்.

தினத்தந்தி

வாடிப்பட்டி,

வாடிப்பட்டி அருகே கிணற்றில் தவறி விழுந்து ஆசிரியர் பரிதாபமாக இறந்தார்.

பள்ளி ஆசிரியர்

மதுரை மாவட்டம் சமயநல்லூர் வைகை ரோட்டில் குடியிருந்து வருபவர் சந்தன சாமி. இவரது மகன் ராஜா(வயது 40). மதுரையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவருக்கு கிரேசி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இந்தநிலையில் நேற்று காலை 10 மணிக்கு வாடிப்பட்டி அருகே தனிச்சியத்தில் உள்ள ஒரு கிணற்றில் தனது நண்பர்களுடன் குளிக்க சென்றார்.

தவறி விழுந்தார்

கிணற்றில் குளித்துவிட்டு கிணற்றுமேட்டு ஒரமாக நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கிணற்றில் தவறி விழுந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் கிணற்றில் இறங்கி 2 மணி நேரத்திற்கு பின் அவரது உடலை பிணமாக மீட்டனர். இது சம்பந்தமாக வாடிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை