சென்னை,
கல்லூரி கல்வி இயக்குனர் பூர்ண சந்திரன் தலைமையில், கல்லூரி மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகளுக்கு புதிய விதிமுறைகளை வகுக்க 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கும் பணியில் இந்த குழு தீவிரமாக ஈடுபட உள்ளது.
நேரடி வகுப்புகளைப் போன்ற ஆன்லைன் வகுப்புகளிலும் உடையணிதல் வேண்டும், ஆன்லைன் வகுப்புகளை கண்காணிக்க தனிக்குழு, வகுப்பறை நடவடிக்கைகளை முழுவதுமாக பதிவு செய்ய நடவடிக்கை, புகார் பிரிவு உருவாக்குதல், இணைய வசதியை வேகப்படுத்துதல் உள்ளிட்ட குழுவின் பரிந்துரையில் இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த குழு வரும் 11 ஆம் தேதி ஆன்லைன் வகுப்பு விதிகளுக்கான வரைவு அறிக்கையை தமிழக அரசிடம் சமர்ப்பிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.