தமிழக செய்திகள்

மின் கோபுரத்தில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல்

மது போதையில் மின் கோபுரத்தில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல் விடுத்தார்.

தினத்தந்தி

அரியலூர் மாவட்டம் தா.பழுர் அருகே தேவாமங்கலம் கிராமம் காந்திநகரை சேர்ந்தவர் சின்னராஜா (வயது 25). இவர் ஜெயங்கொண்டம் பழக்கடையில் கூலி வேலை பார்த்து வருகிறார். இவர் மதுபோதையில் வீட்டின் அருகே உள்ள மின் கோபுரத்தில் ஏறி தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்தார். இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த முக்கியஸ்தர்கள் அவரை கீழே இறங்க கூறியும் அவர் 4 மணி நேரமாக கீழே இறங்காததால் ஜெயங்கொண்டம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் தலைமையிலான போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி கீழே இறங்க வைத்தனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்