தமிழக செய்திகள்

மறைமலைநகர் அருகே தோழி இறந்த துக்கத்தில் வாலிபர் தற்கொலை

மறைமலைநகர் அருகே தோழி இறந்த துக்கத்தில் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

தினத்தந்தி

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அருகே உள்ள செங்குன்றம் வரதராஜன் தெருவை சேர்ந்தவர் அசோக் (வயது 22), பி.காம் பட்டதாரியான இவர் கூடுவாஞ்சேரியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர் படிக்கும்போது உடன் படித்த பெண் ஒருவருடன் பழகி வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழகி வந்த தோழி இறந்து விட்டார்.

தோழி இறந்த துக்கத்தில் இருந்த அசோக் நேற்று முன்தினம் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த மறைமலைநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அசோக்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு