நாகர்கோவில்:
நாகர்கோவிலில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலியானார்.
நாகர்கோவில் அறுகுவிளையை சேர்ந்தவர் ராஜா (வயது 21). இவர் கடந்த 23-ந் தேதி தன் நண்பருடன் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றார். செட்டிகுளத்தில் இருந்து பீச்ரோடு சென்றபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இந்த விபத்தில் ராஜா சாலையில் விழுந்து படுகாயம் அடைந்தார்.
அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி ராஜா நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இதனையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டது. இச்சம்பவம் குறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.