தமிழக செய்திகள்

மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி

கொல்லங்கோடு அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி

தினத்தந்தி

கொல்லங்கோடு, 

கேரள மாநிலம் பாறசாலை அருகே உள்ள இஞ்சிவிளை நடுதோட்டம் பகுதியை சேர்ந்தவர் ஜெய்லானி. இவருடைய மகன் கெனீப் (வயது 28). இவர் நேற்று அதிகாலை களியக்காவிளையில் இருந்து ஊரம்பு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். சங்குருட்டி பகுதியை சென்றடைந்த போது போலீஸ் சார்பில் வைக்கப்பட்ட பேரிகார்டில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அவருடைய தலையில் படுகாயம் ஏற்பட்டது.

உடனே அவரை அக்கம் பக்கத்தை சேர்ந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பாறசாலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் கொல்லங்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை