தமிழக செய்திகள்

லாரி மோதி வாலிபர் பலி

தினத்தந்தி

சேலம் அருகே வீராணம் அருகே பூவனூர் ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்த தனபால் மகன் ராஜா (வயது 30). இவர், நேற்று முன்தினம் இரவு அயோத்தியாப்பட்டணம் பகுதிக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் அவர் நள்ளிரவில் அங்கிருந்து மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டு சென்றுள்ளார். சேலம்- அரூர் பைபாஸ் சாலையில் பருத்திக்காடு பஸ் நிறுத்தம் அருகில் சென்றபோது, எதிரே அரூரில் இருந்து சேலம் நோக்கி ஒரு லாரி வந்தது. அந்த லாரி, இளையராஜா ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் அவர் தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த வீராணம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வீராணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்