தமிழக செய்திகள்

புளியந்தோப்பில் வாலிபருக்கு கத்திக்குத்து

புளியந்தோப்பில் வாலிபரை கத்தியால் குத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க் பகுதியைச் சேர்ந்தவர் விஜய் (வயது 26). இவரை, நேற்று முன்தினம் இரவு அதே பகுதியைச் சேர்ந்த சரத்குமார் (26) என்பவர் கத்தியால் குத்தினார். இதில் காயம் அடைந்த விஜய், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

இதுபற்றி பேசின்பிரிட்ஜ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கலா என்பவர் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கு காரணம் சரத்குமார் என்று நினைத்த கலாவின் மகனான விஜய், இது குறித்து சரத்குமாரிடம் தட்டிக்கேட்டார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் சரத்குமார் தன்னிடம் இருந்து சிறிய கத்தியால் விஜயை குத்தியது தெரிந்தது. சரத்குமார போலீசார் கைது செய்தனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்