தமிழக செய்திகள்

லாட்டரி சீட்டுகள் கடத்திய வாலிபர் கைது

கூடலூரில் லாட்டரி சீட்டுகள் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

 கேரள மாநிலம் குமுளியில் இருந்து மொத்தமாக லாட்டரி சீட்டுகளை விலைக்கு வாங்கி தமிழகத்திற்கு கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் தமிழக எல்லை பஸ் நிறுத்தம் பகுதியில் லோயர்கேம்ப் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அல்போன்ஸ்ராஜா தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தேனிக்கு செல்லும் பஸ் நிறுத்தத்தில் தனியாக ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் குமுளி 6-ம் மைல் பகுதியை சேர்ந்த பாபு (வயது 31) என்பதும், ரூ.81 ஆயிரத்து 600 மதிப்புள்ள லாட்டரி சீட்டுகளை இடுப்பில் மறைத்து வைத்து கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 ஆயிரத்து 40 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு